உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவன் பைக் ஓட்டி விபத்து போலீஸ் உட்பட 3 பேர் காயம்

சிறுவன் பைக் ஓட்டி விபத்து போலீஸ் உட்பட 3 பேர் காயம்

காரைக்கால்: காரைக்காலில் சிறுவன் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், போலீஸ்காரர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.காரைக்கால், நெடுங்காடு, அன்னவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 43; போலீஸ்காரர். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு இரவு தனது பைக்கில் அன்னவாசல் அருகில் சென்றபோது எதிரே 17 வயது சிறுவன் தனது தங்கையுடன் வந்த பைக் போலீஸ்காரர் செந்தில்குமார் மீது மோதியது. அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.செந்தில்குமார் மற்றும் 17 வயது சிறுவன், உடன் வந்த சிறுமி ஆகிய மூவரும் காயமடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, நெடுங்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக செந்தில்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விபத்து தொடர்பாக சிறுவனுக்கு பைக் கொடுத்த அவரது தந்தை செல்வம் மீது நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை