மேலும் செய்திகள்
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
30-Jul-2025
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப் புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் அரிகோவிந்தன் தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆசிரியை கலைவாணி வரவேற்றார். ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பாலச்சங்கர், ஆசிரியர்கள் கலைவாணி, கீதாஞ்சலி, மெர்லின், சுகுணா, அலுவலக ஊழியர் ரவி செய்திருந்தனர்.
30-Jul-2025