மரக்கன்று நடும் விழா
திருக்கனுார்; காட்டேரிக்குப்பம் அக்னி வித்யா கேந்திரா பள்ளியில் மரக்கன்று நடும் பணியினை நிர்வாகி பாஸ்கர் துவக்கி வைத்தார்.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காட்டேரிக்குப்பம் அக்னி வித்யா கேந்திரா பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. பள்ளி முதல்வர் வனிதா பாஸ்கர் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாகி பாஸ்கர் மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.