உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் அரசு புத்தொளி தொடக்கப் பள்ளியில் வன பாதுகாப்பு சங்க இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவில், வட்டம்-5, பள்ளிகள் துணை ஆய்வாளர் புவியரசன், இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அரிகோவிந்தன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்த னர். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீனா வர வேற் றார். மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. விழாவில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !