உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாச பேச்சு :இருவர் கைது

ஆபாச பேச்சு :இருவர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் போலீசார் ஜூன் 9 ரோந்து சென்றனர். கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மதியழகன், 39, என்பவர் மது போதையில், கூடப்பாக்கம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல் புதுச்சேரி பாரதி வீதியில் நின்று கொண்டு ஆபாசமாக பேசிய வாணரப்பேட்டையை சேர்ந்த அருண்குமார், 41, என்பவரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி