உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரண்டு பெண்கள் மாயம்

இரண்டு பெண்கள் மாயம்

புதுச்சேரி : புதுச்சேரியில் இளம் பெண் உட்பட இரண்டு பெண்கள் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி முத்துபிள்ளை பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் ரேவதி, 25. இவர், நேற்று முன்தினம் வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல, வில்லியனுார் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி உமா, 53. இவர் கடந்த 10ம் தேதி வெளியில் சென்றவர், வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !