வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாரம் மூன்று முறை என்று மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம், திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காட்பாடி, சித்தூர், பகலா வழியாக திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்கால் வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கவேண்டும். இதன்மூலம் கூடுதலாக நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இந்த மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், திருப்பதிக்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும். மேலும் வடமேற்கு தமிழ்நாட்டில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு என வருகை தரும் மும்மத பக்தர்களும் பலனடைவார்கள். பெருமளவில் வளர்ந்து யாரும் சரக்கு கப்பல் துறைமுக நகரான காரைக்கால் தொழில் நகரமான வேலூர் மாவட்டம் இணைக்கப்படுவதன் மூலம் ஆண்டு முழுக்க 365 நாட்களும் ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கொட்டும் பாதையாக அமையும்.