மேலும் செய்திகள்
மார்கழி மகோற்சவ பக்தி இசை நிகழ்ச்சி
03-Jan-2025
புதுச்சேரி : எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் சாராதம்பாள் கோவிலில் நடந்து வரும், 13ம் ஆண்டு மார்கழி மகோற்சவத்தில் நேற்று வைகுண்ட ஏகாதசி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி ராமானுஜர் பரபக்தி இயக்கம் மார்கழி மகோற்சவம் கமிட்டி மற்றும் சாரதா கலாமந்திர் இசை நாட்டியப்பள்ளி சார்பில், 13ம் ஆண்டு மார்கழி மகோற்சவம் எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் சாராதம்பாள் கோவிலில் துவங்கி நடந்து வருகிறது.நேற்று மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை விஷ்ணு, லட்சுமி, லலிதா சஹஸ்ரநாமம் சேவித்தல் நடந்தது. தொடர்ந்து காயத்ரி ஜெயராமனின் கர்நாடக இசை நிகழ்ச்சி, வைகுண்ட ஏகாதசி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று 11ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.
03-Jan-2025