உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுதானா நகரில் நாளை குடிநீர் கட் 

சுதானா நகரில் நாளை குடிநீர் கட் 

புதுச்சேரி: சுதானா நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை, நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்டம் செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சுதானா நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கழுவி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (3ம் தே தி), நாளை மறுநாள் (4ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரையில், சுதானா நகர், துளுக்கானத்தம்மன் நகர், அங்காளம்மன் நகர், அன்னை தெரசா நகர், அரவிந்தர் நகர், நேதா நகர், திருமகள் நகர், மக்கள் நகர், நைனார்மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை ப்படும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை