உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கோரிமேடு பகுதியில் குடிநீர் இன்று கட்

 கோரிமேடு பகுதியில் குடிநீர் இன்று கட்

புதுச்சேரி: கோரிமேடு பகுதியில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; கோரிமேடு, இந்திரா நகர் அரசு ஆரம்ப பள்ளி அருகில், பூத்துறை சாலையில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை குரு நகர், சிவாஜி நகர், பிரியதர்ஷனி நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும். இதற்கு பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி