மேலும் செய்திகள்
டிரைவர் தற்கொலை
07-Jan-2025
அரியாங்குப்பம் : மது குடித்ததை மனைவி கண்டித்ததால், கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரியாங்குப்பம் அடுத்த மணவெளி தேர்முட்டி வீதியை சேர்ந்தவர் பாஸ்கரன், 50; பெயிண்டர். இவர், அதிகமாக மது குடித்ததால், கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று அவர் மது குடித்து விட்டு, வீட்டுக்கு வந்தார். கடன் இருக்கும் போது ஏன் மது குடித்தாய் என அவரது மனைவி தட்டி கேட்டார்.அதனால் மனமுடைந்த அவர், வீட்டு அறையில் துாக்கு போட்டு கொண்டார். அருகில் உள்ளவர்கள் அவரை, மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Jan-2025