உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தைப்பூச தினத்தன்று ஒயின்ஷாப் மூட உத்தரவு

தைப்பூச தினத்தன்று ஒயின்ஷாப் மூட உத்தரவு

புதுச்சேரி : வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 11ம் தேதி மதுக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியில் வரும் 11ம் தேதி வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு, கலால் துறை ஆணையர் உத்தரவுப்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகையான மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.அதனை மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை