உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காப்பகத்தில் பெண் இறப்பு

காப்பகத்தில் பெண் இறப்பு

அரியாங்குப்பம்; தனியார் மனநல காப்பகத்தில் தங்கியிருந்த பெண் உடல் நலகுறைவால் இறந்தார். அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை, காக்கையாந்தோப்பில், தனியார் மனநல காப்பகம் உள்ளது. 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில், அங்கு தங்கியிருந்த லட்சுமி, 40; என்பவருக்கு கடந்த 4ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை மனநல காப்பகத்தின் ஊழியர்கள் அரசு மருத்துவமனையில், சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை