உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீப்பிடித்து காயமடைந்த தொழிலாளி சாவு

தீப்பிடித்து காயமடைந்த தொழிலாளி சாவு

நெட்டப்பாக்கம் : கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 65; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 24ம் தேதி, இரவு மது குடித்துவிட்டு, அவரது அறையில் படுக்க சென்றபோது, சுருட்டு பிடித்து விட்டு மெத்தை மீது வீசினார். சு ருட்டு நெருப்பு பட்டு மெத்தை ஏரிந்ததில், அவர் மீது தீ பரவியது. அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். காயமடைந்த அவரை, ஜிப்மரில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ