உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளி மரணம் : போலீசார் விசாரணை

தொழிலாளி மரணம் : போலீசார் விசாரணை

பாகூர்: கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகூர் அடுத்துள்ள சேலியமேடு பேட் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதுரை 50; கூலித் தொழிலாலி. குடிப்பழக்கத்திற்கு ஆளாான மதுரை சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை சித்ராவை அவரது மகன் மனோஜ் 23; ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மாலை திரும்பி வந்து பார்த்த போது, மதுரை சுய நினைவின்றி வீட்டில் படுத்துகிடந்தார். அவரை பாகூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின் அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ