உலகத்தமிழர் பொருளாதார மாநாடு மாஜி சபாநாயகர் பங்கேற்பு
புதுச்சேரி : மலேசியாவில் நடக்கும் உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டில், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து பங்கேற்கிறார்.மலேசியா, கோலாலம்பூரில் சர்வதேச மற்றும், 11வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு வரும், 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது.இந்த மாநாட்டில், தொழில் அதிபர்கள், வணிக நிறுவன தலைவர்கள், சுய தொழில் புரிபவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.மேலும் வணிக வளர்ச்சி, முதலீடு வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சிக்கான விழை தொழில் புரிவோரிடம் பணிகளை ஒப்படைத்தல், சர்வதேச கூட்டுறவினை ஏற்படுத்துதல் தொடர்பான விவாதங்களை நடத்துகின்றனர்.இதில் புதுமை யான பேச்சாளர்கள் கலந்து கொண்டு, எதிர்கொண்ட வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றிய அனுபவங்களை விவரிக்க உள்ளனர். இந்த மாநாட்டில், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.