உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / காலிறுதியில் ஸ்ரீகாந்த், உன்னதி ஹூடா: சையது மோடி சர்வதேச பாட்மின்டனில்

காலிறுதியில் ஸ்ரீகாந்த், உன்னதி ஹூடா: சையது மோடி சர்வதேச பாட்மின்டனில்

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த், உன்னதி ஹூடா உள்ளிட்டோர் முன்னேறினர்.லக்னோவில், சையது மோடி சர்வதேச 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சனீத் தயானந்த் மோதினர். இதில் ஸ்ரீகாந்த் 21-6, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 15-21, 18-21 என சகவீரர் மன்ராஜ் சிங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் 21-16, 17-21, 21-17 என சகவீரர் தருணை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 21-16, 10-21, 21-12 என சகவீரர் ராகுல் பரத்வாஜை வென்றார். இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 19-21, 16-21 என ஹாங்காங்கின் ஜேசன் குணாவனிடம் தோல்வியடைந்தார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-15, 21-10 என சகவீராங்கனை தஸ்னிம் மிர்ரை வென்றார். இந்தியாவின் தன்வி சர்மா 13-21, 21-16, 21-19 என ஜப்பானின் ஒகுஹராவை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் இஷாராணி 21-15, 21-8 என, உக்ரைனின் போலினா புரோவாவை வென்றார். இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ 16-21, 21-19, 21-17 என சகவீராங்கனை தேவிகா சிஹாக்கை வீழ்த்தினார்.மற்ற போட்டிகளில் இந்தியாவின் தன்யா ஹேம்நாத், அனுபமா, மான்சி சிங் தோல்வியடைந்து வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !