இந்திய அணிக்கு ரூ.58 கோடி * சாம்பியன்ஸ் டிராபிக்கு பி.சி.சி.ஐ., பரிசு
புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 58 கோடி பரிசு வழங்கப்படுகிறது.ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் துபாயில் நடந்தது. பைனலில் அசத்திய இந்திய அணி, நியூசிலாந்தை சாய்த்து, 3வது முறையாக கோப்பை வென்றது. இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ரூ. 58 கோடி பரிசு வழங்குவதாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்துள்ளது. இதில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என யாருக்கு எவ்வளவு தொகை என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.