உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / களத்தில் அழுதார் ரொனால்டோ: நழுவியது கிங்ஸ் கோப்பை

களத்தில் அழுதார் ரொனால்டோ: நழுவியது கிங்ஸ் கோப்பை

ஜெட்டா: கிங்ஸ் கோப்பை கால்பந்து பைனலில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நாசர் அணி, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் தோல்வி அடைந்தது. கோப்பை நழுவிய சோகத்தில் அழுதார் ரெனால்டோ.சவுதியின் ஜெட்டாவில் உள்ள அப்துல்லா ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடந்த கிங்ஸ் கோப்பை கால்பந்து பைனலில் அல்-நாசர், அல்-ஹிலால் கிளப் அணிகள் மோதின. அல்-நாசர் அணிக்காக போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ விளையாடினார். 7வது நிமிடத்தில் அலெக்சாண்டர் மிட்ரோவிச் கோல் அடிக்க, அல்-ஹிலால் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

'ரெட் கார்டு' மழை

அல்- நாசர் அணியின் கோல்கீப்பர் டேவிட் ஆஸ்பினா, 'பெனால்டி ஏரியா'வுக்கு வெளியே பந்தை கையால் தொட்டு தவறு செய்ய, 'ரெட் கார்டு' காட்டி வெளியேற்றப்பட்டார். 87வது நிமிடத்தில் எதிரணி வீரரை முரட்டுத்தனமாக மடக்கிய அல்-ஹிலால் அணியின் அலி அல் -புலாய்ஹி 'ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இரு அணிகளும் 10 பேருடன் விளையாட நேர்ந்தது.ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் அல்-நாசர் அணியின் அய்மன் யாஹ்யா ஒரு கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 91வது நிமிடத்தில் இரண்டாவது 'எல்லோ கார்டு' பெற்ற அல்-ஹிலால் அணியின் தற்காப்பு பகுதி வீரர் கலிது கவுலிபலி 'ரெட் கார்டு' காட்டி வெளியேற்றப்பட்டார்.

'பெனால்டி ஷூட் அவுட்'

நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் சமநிலை நீடிக்க, போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. இதில் கோல் அடிக்கப்படாததால், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இம்முறை ரொனால்டோ கோல் அடித்த போதும் மற்றவர்கள் ஏமாற்றினர். இறுதியில் அல்-நாசர் அணி, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில், 4-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து கோப்பையை கோட்டைவிட்டது. இந்த சோகத்தில், களத்தில் கண்ணீர்விட்டு அழுதார் ரொனால்டோ. சக வீரர்கள் இவருக்கு ஆறுதல் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை