ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா
ஹாங்காங்: ஹாங்காங்கில் உலக ஸ்குவாஷ் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று 'ரவுண்டு-16' போட்டி நடந்தன. இந்திய பெண்கள் அணி, வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், 3-0 (11-9, 11-6, 11-8) என ஆஸ்திரேலியாவின் ஜெசிக்காவை வென்றார். மற்றொரு போட்டியில் நிருபமா 1-2 என சாராவிடம் தோற்றார். ஸ்கோர் 1-1 என ஆனது. மூன்றாவது, கடைசி போட்டியில் இந்தியாவின் ஆகான்ஷா 3-0 என அலெக்சை வீழ்த்தினார். இந்தியா 3-0 என வென்று, இத்தொடரில் 12 ஆண்டுக்குப் பின் காலிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று அமெரிக்காவை எதிர்கொள்கிறது.ஆண்கள் வெற்றிஇந்திய ஆண்கள் அணி, மலேசியாவை சந்தித்தது. முதல் போட்டியில் இந்தியாவின் அபே சிங் 1-2 என தோற்றார். அடுத்து வீர் சோட்ரானி, வேலவன் செந்தில் குமார் தங்கள் போட்டிகளில் வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 2-1 என வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் பிரான்சை சந்திக்கிறது.