மேலும் செய்திகள்
ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா
12-Nov-2025
மும்பை: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் மும்பையில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை, இந்தியாவின் அனாஹத் சிங் 17, இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை, 39 வயது ஜோஷ்னா சின்னப்பாவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 11-8 என கைப்பற்றிய அனாஹத், அடுத்த செட்டை 11-13 என இழந்தார். 3வது செட்டை அனாஹத் 11-9 என வசப்படுத்த, 4வது செட்டை ஜோஷ்னா 11-6 என கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்யும் 5வது, கடைசி செட்டில் கடைசி நேரத்தில் அசத்திய அனாஹத், 11-9 என வென்றார்.முடிவில் அனாஹத் 3-2 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். சர்வதேச அரங்கில் அனாஹத் கைப்பற்றிய 13வது கோப்பை இது.
12-Nov-2025