மேலும் செய்திகள்
காலிறுதியில் தியா ஜோடி
09-Jul-2025
ஜெய்ப்பூர்: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் பைனலுக்கு முன்னேறினார் தான்வி கன்னா. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் இத்தொடரின் 'நம்பர்-5', உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்வி கன்னா, 114வது இடத்திலுள்ள, இத்தொடரின் 'நம்பர்-4' வீராங்கனை, மலேசிய வீராங்கனை கோ ஜி ஜுவானை சந்தித்தார்.இதன் முதல் செட்டை தான்வி 11-8 என கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டை 11-8 என வசப்படுத்திய இவர், மூன்றாவது செட்டை 11-4 என எளிதாக வென்றார். முடிவில் தான்வி, 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதில் இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை (உலகத் தரவரிசை 94) எகிப்தின் நுார் ககபியை இன்று எதிர்கொள்கிறார்.
09-Jul-2025