உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

கெய்ரோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் அனாஹத் சிங்.எகிப்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில், ஆசிய ஜூனியர் (19 வயது) சாம்பியன், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், பிரேசிலின் லாரா சவுசாவை சந்தித்தார். முதல் செட்டை 11-5 என வென்ற அனாஹத், அடுத்த செட்டை 11-2 என எளிதாக வசப்படுத்தினார். தொடர்ந்து மூன்றாவது செட்டையும் 11-6 என கைப்பற்றினார். முடிவில் 3-0 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் அனாஹத், எகிப்தின் மலிகாவை சந்திக்க உள்ளார்.ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் ஆர்யவீர், 0-3 என (2-11, 6-11, 7-11) எகிப்தின் செய்பெல்டினிடம் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீரர் யூஷா நபீஸ், 1-3 என (11-9, 4-11, 8-11, 5-11) கொலம்பியாவின் ஜுவானிடம் வீழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை