மேலும் செய்திகள்
மொபைல் போன் டவரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது
01-Sep-2024
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் அடுத்த மேலச்சேரி கிராமத்தில், ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் போன் 'டவர்' உள்ளது. நேற்று முன்தினம் ஏர்டெல் ஊழியர்கள் டவர் கம்பத்தை ஆய்வு செய்தனர்.அப்போது, அங்கு வைக்கப்பட்டு இருந்த பேட்டரியை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இது குறித்து, ஏர்டெல் நிறுவன ஊழியர்கள் பாலுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
01-Sep-2024