உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

மாமல்லபுரம்:கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் மாணிக்கம், 52. இவர், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை 8:00 மணிக்கு, மேலகுப்பம் பகுதியில் நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்து, அவரின் உறவினர் கேசவன், மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி