உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள்

சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள்

செங்கல்பட்டு:சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி.இவர், வீட்டின் அருகில், 2019 ஜூலை 10ம் தேதி, விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, காஞ்சிபுரம் அடுத்த, மேல்மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம், 60 என்பவர் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்தார்.இதுகுறித்த புகாரின்படி ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருணாச்சலத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில், நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அருணாச்சலத்திற்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழகஅரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி