உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சீர்மரபினர் சலுகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

சீர்மரபினர் சலுகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு:சீர்மரபினர் பொருளாதார மேம்பட்டு திட்டத்தில், பல்வேறு சலுகைகள் பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வாயிலாக, சீர்மரபினர் இனைத்தைச் சார்ந்தவர்களுக்கு, மத்திய அரசால் பொருளாதார மேம்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு, தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது. சுகாதாரத்தில், சிறப்பு காப்பீட்டு திட்டம் வழங்கப்படுகிறது. சமூக நிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த, சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சியை எளிதாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டுமனை பட்டா, வீடுகள் கட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகள் மத்திய அரசின் இணையதளம் www.dwbdnc.dosje.gov.inஎன்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை