மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
9 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
9 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
9 hour(s) ago
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த தருமாபுரி கிராமத்தில், கெங்கை அம்மன் கோவில், ஆஞ்நேயர் கோவில், நவகிரக சன்னதிகள் உள்ளன. இக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பணிகளும் முடிந்தன.இதன் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. இதற்காக, கடந்த 17ம் தேதி காலை 8:00 மணிக்கு, முதல்கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜையும் நடந்தது. நேற்று நான்காம் கால பூஜையும், 9:30 மணிக்கு கலச புறப்பாடும், 10:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேக நீரும் ஊற்றப்பட்டது.விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.அதேபோல், திருப்போரூர் பிரணவ மலை கைலாசநாதர் கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் கோவில், தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago