உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா துவக்கம்

தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா துவக்கம்

திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியம், சென்னை அடுத்த தாழம்பூர் ஊராட்சியில், திரிசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஞானசக்தியாக சரஸ்வதி தேவியும், இச்சா சக்தியாக லட்சுமி தேவியும், கிரியா சக்தியாக தாய் மூகாம்பிகையும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு, விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடிமரத்தில் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடந்தது. முக்கிய விழாவாக, வரும் 9ம் தேதி, 10, 11 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கல்வியாக வழிபாடும், மார்ச் 11ம் தேதி தேர்த் திருவிழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை