உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலர்கள் மோதி விபத்து ஒருவர் பலி 2 பேர் காயம்

டூ - வீலர்கள் மோதி விபத்து ஒருவர் பலி 2 பேர் காயம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுப்பாக்கம் அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேவராஜ், 56, பெருமாள், 47, ஆகிய இருவரும், நேற்று பெருக்கரணை கிராமத்தில் இருந்து, தண்டலம் நோக்கி 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது, கயப்பாக்கம்கிராமத்தைச் சேர்ந்த குருநாதன், 17, என்பவர், அச்சிறுபாக்கத்தில் இருந்து கயப்பாக்கம் நோக்கி, 'ஹோண்டா ஸ்கூட்டி' வாகனத்தில் வந்த போது, மேட்டுப்பருக்கல் அருகே இரு வாகனங்களும்நேருக்கு நேர் மோதின.இதில், தேவராஜ், பெருமாள், குரு ஆகிய மூவரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த அச்சிறுபாக்கம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, செங்கல் பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில், தேவராஜ் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அச்சிறுபாக்கம் போலீசார்வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை