உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல் குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி

கல் குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி

குன்றத்துார் : கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன், 29. இவர், நேற்று முன்தினம் மாலை, தன் நண்பர்களுடன் சோமங்கலம் அடுத்த பூந்தண்டலம் கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றார்.அப்போது சத்தியநாராயணன் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. உடனிருந்தவர்கள் அவரை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சத்தியநாராயணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !