உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொருட்காட்சி 1.82 லட்சம் பேர் வருகை

பொருட்காட்சி 1.82 லட்சம் பேர் வருகை

சென்னை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், தீவுத்திடலில் நடந்து வரும், 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, கடந்த 6ம் தேதி துவங்கியது.இதில், 30க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு விளையாட்டு தளங்கள்; 110 சிறிய கடைகள்; 30 தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.குடியரசு தின விடுமுறையையொட்டி, நேற்று முன்தினம், ஒரே நாளில் 20,697 பேர் பொருட்காட்சியை பார்வையிட்டுள்ளனர். கடந்த 10ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை 1.82 லட்சம் பேர், பொருட்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மார்ச் இறுதி வரை நடக்கும் பொருட்காட்சியில், பெரியவர்களுக்கு 40 ரூபாய், சிறியவர்களுக்கு 25 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ