உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்

பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்

சென்னை, பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, சூளைமேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமிரா, 42; தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியை. நேற்று முன்தினம் இரவு, வீட்டு பீரோவில் வைத்திருந்த நகையை சரிபார்த்துள்ளார். அப்போது, 20 சவரன் நகை மாயமானது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார் அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் வேலைக்காரர்களிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை