உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சாரம் பாய்ந்து செய்யூரில் 3 பசுக்கள் பலி

மின்சாரம் பாய்ந்து செய்யூரில் 3 பசுக்கள் பலி

செய்யூர்:செய்யூரில், மேய்ச்சலுக்குச் சென்ற மூன்று பசுக்கள், கீழே அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. செய்யூர் அடுத்த மேற்கு செய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி, 60; விவசாயி. நேற்று காலை 11:00 மணியளவில், 20க்கும் மேற்பட்ட பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள ஏரிக்கரை அருகே, மின்மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டு இருந்த உயர் அழுத்த மின்கம்பிகள் அறுந்து கிடந்துள்ளன. அப்போது, கீழே அறுந்து கிடந்த மின்கம்பிகள் மீது உரசிய போது, மின்சாரம் பாய்ந்து மூன்று பசுக்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மற்ற பசுக்கள் அலறி ஓடி உயிர் தப்பின. இதுகுறித்து வருவாய்த் துறையினர் மற்றும் மின்சார துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, மின்சாரம் நிறுத்தப்பட்டு, மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டன. உயிரிழந்த மூன்று பசுக்கள், கூவத்துார் அரசு கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. விபத்து குறித்து செய்யூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி