ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷம்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், புகழ்பெற்ற இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, ஆடி மாத பிரதோஷ வழிபாடு, வெகு விமரிசையாக நடந்தது. இதில், நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளிக்கவசம் அணிவித்து, கோவில் சிவாச்சாரியார் சங்கர் தலைமையில், வேத மந்திரங்கள் முழங்க, மேல தாளங்கள் ஒலிக்க, சங்கொலி முழங்க மஹா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.