/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டுபுகார் பெட்டி;பேரூராட்சி மீன் அங்காடியில் அடிப்படை வசதிகள் இல்லை
செங்கல்பட்டுபுகார் பெட்டி;பேரூராட்சி மீன் அங்காடியில் அடிப்படை வசதிகள் இல்லை
பேரூராட்சி மீன் அங்காடியில் அடிப்படை வசதிகள் இல்லை
திருப்போரூர் பேரூராட்சி சார்ந்து, மீன் அங்காடி செயல்படுகிறது. இந்த மீன் அங்காடியை, பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்கு, மீன், கருவாடு, நண்டு, இறால் உள்ளிட்டவை விற்பனைக்காக, 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இங்கு போதிய தண்ணீர் தேவைக்காக, மினி டேங்க் அமைக்க வேண்டும். கட்டடத்தின் உள்பகுதியில், பழுதாகி வரும் மின்சார இணைப்புகளை சரிசெய்ய வேண்டும்.நுழைவாயில் இரும்பு கதவு உடைந்துள்ளது. அதையும் சரிசெய்ய வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.கிருஷ்ணன், திருப்போரூர்.