/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு:புகார் பெட்டி; சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள்
செங்கல்பட்டு:புகார் பெட்டி; சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள்
சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள்
திருப்போரூர் அடுத்த கொட்டமேடு- - மானாமதி சாலை இடையே, எடர்குன்றம், பூண்டி, ராயமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பூண்டி அருகே உள்ள சில மின் கம்பம்ங்கள் சேதமடைந்துள்ளதால், அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். மேலும், இந்த மின் கம்பம், எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயமான நிலையில் உள்ளது.மின் கம்பம் விழுந்து அசம்பாவிதம் ஏற்படுவதற்குள், கம்பத்தை மாற்றியமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.குமரன், பூண்டி.