/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு:புகார் பெட்டி;விபத்து ஏற்படும் நிலையில் மின் கம்பம்
செங்கல்பட்டு:புகார் பெட்டி;விபத்து ஏற்படும் நிலையில் மின் கம்பம்
சூணாம்பேடு பஜார் பகுதியில், பெருமாள் கோவில் தெருவில், குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் செய்ய மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து உள்ளன. பலத்த காற்று வீசினால், குடியிருப்புப் பகுதியில் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. பருவமழைக்கு முன், சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க துறை சாந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மகேஷ், சூணாம்பேடு கிராமம்.