உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; அருள் நகரில் தொடர் மின் தடை தீர்வு காண வேண்டுகோள்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; அருள் நகரில் தொடர் மின் தடை தீர்வு காண வேண்டுகோள்

அருள் நகரில் தொடர் மின் தடை தீர்வு காண வேண்டுகோள்

கூடுவாஞ்சேரி அருள் நகர் சுற்றுவட்டார பகுதியில், சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதனால், இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள் இரவில் துாக்கமின்றி தவிக்கின்றனர்.இல்லத்தரசிகள் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைகின்றனர். எனவே, இப்பகுதியில் நிலவி வரும் தொடர் மின் தடைக்கு, நிரந்தர தீர்வு கண்டு, சீராக மின் வினியோகம் செய்ய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.கலைச்செல்வி, அருள் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி