உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கருக்காமலையில் கட்டுமான பணி

புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கருக்காமலையில் கட்டுமான பணி

செய்யூர்:செய்யூர் அருகே கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருக்காமலை பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஏரிக்கரை அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தேக்கத் தொட்டி உள்ளது.ஏரியில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக, மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக அப்பகுதிவாசிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.முறையான பராமரிப்பு இல்லாமல், மேல்நிலைத் தேக்கத் தொட்டி சேதமடைந்துள்ளது. தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் விரிசல் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.அதனால், துறை சார்ந்த அதிகாரிகள், பழைய மேல்நிலைத் தேக்கத் தொட்டி இடியும் முன், புதிய மேல்நிலைத் தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதன் விளைவாக, பழைய மேல்நிலைத் தேக்கத் தொட்டிக்கு எதிரே, ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து, 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் தேக்கத் தொட்டி அமைக்கும் கட்டுமானப் பணிகள், சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை