பாலாறு குடிநீர் திட்ட பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராததால் அதிருப்தி
பெருங்களத்துார்: பெருங்களத்துார் பாலாறு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் முடிந்து, தெரு குழாயை பிரதான குழாயுடன் இணைத்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும், திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்தில் உள்ள பெருங்களத்துார் - பீர்க்கன்காரணையில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பாலாறு குடிநீர் அவை பேரூராட்சியாக இருந்த போது, முடிச்சூர் சாலை வழியாக செல்லும் பாலாறு குழாயில் இருந்து இணைப்பு கொடுத்து, ராஜிவ்காந்தி தெரு, திருவள்ளுவர் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய இடங்களில், பாலாறு குடிநீர் வினியோகிக்கப் பட்டது. அப்போது, பெருங் களத்துார், பீர்க்கன் காரணை பகுதிவாசிகள், பாலாறு தண்ணீரை பிடித்து, குடிநீராக பயன்படுத்தி வந்தனர். மக்களுக்கு பயனுள்ளதாக இருந்த பாலாறு குடிநீர் வினியோகம், திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது, உள்ளூர் ஆதாரம் வாயிலாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியுடன் பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகள் இணைக்கப்பட்டதால், மெட்ரோ அல்லது பாலாறு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தாம் பரம் - முடிச்சூர் சாலை வழியாக பாலாறு குழாய் செல்வதால், அதிலிருந்து இணைப்பு எடுத்து, தொட்டிகளில் நிரப்பி, இப்பகுதிகளுக்கு வினியோகிக்க முடிவு செய்யப்பட்டது. வினியோகம் இதையடுத்து, 98 லட்சம் ரூபாய் செலவில், 55 - 58 ஆகி ய நான்கு வார்டு களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஏதுவாக, தெருக்களில் குழாய் பதிக்கப்பட்டு, அந்த குழாய், தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக செல்லும் பிரதான குழாயுடன் இணைக்கப்பட்டது. இப்பணி முடிந்து, 20 நாட்களுக்கு மேல் ஆகியும், அத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாததால், பெருங்களத்துார் பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து விசாரித்ததில், பெருங்களத்துாருக்கு பாலாறு குடிநீர் வழங்கினால், கிழக்கு தாம்பரத்திற்கு தண்ணீர் குறைந்து விடும் என, மாநகராட்சி 5வது மண்டலத்தை சேர்ந்த ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதா ல், குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதனால், இப்பிரச்னையில், மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, பெருங்களத்துார் பகுதிக்கு பாலாறு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.