உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் அரசு பஸ் மோதி டாக்டர் பலி; 18 பேர் காயம்

செங்கையில் அரசு பஸ் மோதி டாக்டர் பலி; 18 பேர் காயம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டில், அரசு பேருந்து மோதி, மருத்துவர் பலியானார்; 18 பேர் காயமடைந்தனர். கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று காலை, விழுப்புரம் போக்குவரத்து கழக அரசு பேருந்து ஒன்று வந்தது. செங்கல்பட்டு ராட்டின கிணறு ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, அங்கு காத்திருந்த 18 பயணியர் மற்றும் சாலையைக் கடக்க காத்திருந்த இரு மருத்துவர்கள் மீது மோதியதுடன், செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மீதும் மோதியது. இதில், அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிக்குமார், 46, என்ற குழந்தைகள் நல மருத்துவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், பணியாற்றி வந்தார். காயமடைந்த மற்றொரு மருத்துவர் பிரவீன்குமார் மற்றும் பயணியரை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணிகுமார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் சுப்பிரமணியன் அஞ்சலி

செங்கல்பட்டில், பேருந்து மோதி உயிரிழந்த மருத்துவர் மணிக்குமார் உடலுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார். அதன் பின், படுகாயமடைந்தவர்களையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். செங்கல்பட்டு தி.மு.க.,- - எம்.எல்.ஏ., வரலட்சுமி, கலெக்டர் சினேகா, மருத்துவமனை முதல்வர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ