உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகரில் கார் மோதி முதியவர் பலி

மறைமலை நகரில் கார் மோதி முதியவர் பலி

மறைமலை நகர்:மறைமலை நகர் ஜி.எஸ்.டி., சாலையில், ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில், முதியவர் உயிரிழந்தார். செங்கல்பட்டு அடுத்த பரனுார் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், 65. இவர், நேற்று மதியம் 1:00 மணியளவில் ஜி.எஸ்.டி., சாலையில், மறைமலை நகர் நோக்கி 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர்' ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். மறைமலை நகர் சாமியார் கேட் சந்திப்பில், சிப்காட் பகுதிக்குச் செல்ல சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற 'ஹூண்டாய் வெர்னா' கார் மோதியதில் படுகாயமடைந்த பெருமாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், பெருமாள் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை