உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெல் கொள்முதல் நிலையத்தை நிரந்தரமாக செயல்படுத்த எதிர்பார்ப்பு

நெல் கொள்முதல் நிலையத்தை நிரந்தரமாக செயல்படுத்த எதிர்பார்ப்பு

சித்தாமூர்:தொன்னாடு கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்கின்றனர். சித்தாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும். அதிகபடியாக நெல் பயிரிடப்படும். சித்தாமூர் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக தொன்னாடு ஊராட்சியில் 62.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. சம்பா பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், போதைய நெல் வரவு இல்லாததால், கொள்முதல் நிறுத்தப்பட்டது. தற்போது சொர்ணவாரி அறுவடை துவங்கி உள்ள நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க விவசாயிகள் அவதிப்படுகின்றனர். நெல்லை பாதுகாக்க இடவசதி இல்லாத விவசாயிகள், தங்கள் நெல்லை விற்பனை செய்ய தனியார் வியாபாரிகளை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், தொன்னாடு நெல் கொள்முதல் நிலையத்தை நிரந்தரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !