22ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா விடுத்துள்ள செய்தி குறிப்பு: செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு, நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.