உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  விழும் நிலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டி; குண்டுமணிச்சேரி கிராமத்தில் அச்சம்

 விழும் நிலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டி; குண்டுமணிச்சேரி கிராமத்தில் அச்சம்

பவுஞ்சூர்: குண்டுமணிச்சேரி கிராமத்தில், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவுஞ்சூர் அடுத்த அடையாளச்சேரி ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுமணிச்சேரி கிராமத்தில், விநாயகர் கோவில் தெருவில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தால், கடந்தாண்டு இந்த தொட்டிக்கு அருகே, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், பழைய குடிநீர் தொட்டி அகற்றப்படாமல் உள்ளதால், பலத்த காற்று வீசினால் இடிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை