உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறைதீர்வு கூட்டம் 325 மனுக்கள் ஏற்பு

குறைதீர்வு கூட்டம் 325 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு, செங்கல்பட்டில் நடந்த மக்கள் நலன்காக்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 325 மனுக்கள் ஏற்றுக்கொள்ளபட்டன. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மின்னழுத்த குறைபாடு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 325 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை