உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு

முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட, ஐந்தாவது வார்டு சாத்தனுார் பகுதியில், 10.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10,000 லிட்டர் கொள்ளளவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.மதுராந்தகம் -- அருங்குணம் சாலையில், காந்திநகர் பகுதியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை