மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
28-Sep-2025
செய்யூர்:செய்யூர் அருகே நெசப்பாக்கம் கிராமத்தில், பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 9 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நெசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியகோட்டி, 46; விவசாயி. இவரது மனைவி பிரேமா, 40. தம்பதி நேற்று காலை 9:00 மணியளவில், தங்களுக்குச் சொந்தமான வயலுக்குச் சென்று, விவசாய வேலை செய்துள்ளனர். வேலை முடிந்து, 11:30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 9 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து, செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, நகை திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
28-Sep-2025