மேம்பால நடைபாதை மீது கூரை அமைக்க வலியுறுத்தல்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் உள்ள இரும்புநடைபாதை மேம்பாலத்தில் கூரை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை- -திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டி அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டது.இதை தவிர்க்கும் விதமாக, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இது 2022ம் ஆண்டு 'மாண்டஸ்' புயலின் காரணமாக பெருத்த சேதம் அடைந்தது.இதன், கூரையில் அமைக்கப்பட்ட ஓடுகள், பிய்த்துக் கொண்டு, விபத்தை ஏற்படுத்தும் வகையில், காற்றில் ஊசலாடின.இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து சென்றனர். 2023ல், இரும்பு நடை பாதை கூரையின் மீது இருந்த பிளாஸ்டிக் ஓடுகள் அகற்றப்பட்டன.கூரை அகற்றப்பட்டு, 15 மாதங்ளாகியும், இதுவரை மீண்டும், புதிதாக அமைக்கப்படாமல் திறந்த வெளியில் உள்ளது.வரும் நாட்களில், வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், பள்ளி மாணவ, மாணவர்களின் நலன் கருதி, புதிதாக கூரை அமைக்க, தேசிய நெடுஞ்சாலைதுறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.